புதன், 4 செப்டம்பர், 2013

பார்த்திட வருவார் யாரு ?




ஏழைக்கு இல்லை இன்பம் 
இருப்பது யாவுந் துன்பம் 
கூழையே கண்டால் இன்பம் !
கொடுமை தான் வறுமைத் துன்பம் 
நாளையோர் விடிவை எண்ணி
நலமுடன் வாழ எண்ணும்
வாழை போல் ம்டியு மிந்தப்
மாந்தருக் கென்று இன்பம் .?

மாடென உழைத்தே ஈற்றில்
மனத் துயர் மட்டும் மிஞ்சும் !
பாடுகள் பட்டே பின்னால்
பலனது பூ (ஜ் )ஜியம் தான் !
மாடியை நிமிர்ந்து நோக்கும்
மனிதர்கள் இவர்க் ளாலே
மாடிகள் தன்னில் வாழ்வோர்
வதிகிறார் பணத்துக் குள்ளே !

குழு குளுப்பான இல்லம் !
குடித்திட "உயர் ரகங்கள் "
வழு வழுப்பான காரில்
வாழுவர் ,அவர்க்குச்சொர்க்கம்
அழுகையே காணும் ஏழை
அன்னவர்க் இது நரகம்
பழுவான வாழ்க்கைப் பேறு
பார்த்திட வருவார் யாரு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக