ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

என் வீட்டும் பூனை



ஒரு பூனை
அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டு
கதறித் துடிப்பதாக
கனவு கண்டு 
நித்திரையினை தொலைத்தேன்
நிம்மைதியினை இழந்தேன் ...!

காக்கா கோழிகளின்
சங்கீத ராகம்
என் காதுகளை குடையவே
முற்றத்துப் பக்கம் பாதங்கள்
கோலம் வரைந்தன ..!
கண்ககள் நிஜங்களை
தேடி அழைந்தன ...1


என் ராக் கனவுகள் -
என்னை
ஏமாற்ற வில்லை
துரோகமிழைக்கவுமில்லை .!
சில முக நூல் உறவுகளைப் போல்

மன சந்தோஷத்தால் ...!
என் -
இதய மலர் சிரித்து கொட்டியது
அழகான குட்டிகளின்
பிறப்பினைக் கண்டு ...,
வருகையைக் கண்டு ....!


நீண்ட தொல்லைகளுக்குப்
பின் இன்று தான்
என் சுவாச மூச்சுக்கு
மன நிம்மதி கிடைத்தது


இரவு நேர இருளில்
அந்த உடுப்பு பெட்டிக்குள்
எலிகளின் அட்டகாசமா ....?
அல்லது
விளையாட்டு பொம்மைககளின் ?
குரலோசைகளா ..?.
அல்லது
உணர்வுகளின் சப்தங்களா ....?

உன் சுவாசம் பட்ட
வீட்டு சந்து பொந்துகளில்
மூலை முடுக்குக்குகளில்
சூரியனைக் கண்ட பனி போல
மாறத் தொடங்கியுள்ளன

உடம்பினைப் போர்த்திய
துண்டினைப் பார்த்து
உன் இதயம் -
அழுது வடித்தேன் ..?

அதனால் தான் போலும்
உன் உள்ளத்துக் கதவுகளை
அடிக்கடி மூடி
திறந்து எனக்குள் ,
உண்ணாவிரதம்செய்தனவோ ..?
ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

என் ஜீவன் -
எலி ,பல்லி ,கரப்பத்தான் .....,
நுலும்பு கொசு ,எறும்பு
எதுவுமே அற்ற
படுக்கையில் மன நிம்மதி நாடி
உறங்க அழைந்தேன்

உன் குட்டிகளை கண்ட
சின்ன எலிகலெல்லாம்
உன்னைப் போலவே
மரம் விட்டு மரம் தாவும்
மந்திகளைப் போலவே
இடம்மாறி தடம் மாறிப் போயின
நிலை மாறி ..!


சில கனவுகள் பலிக்கும்
நினைவுகள் நிறைவேறும்
என்ற நம்பிக்கைகள்
எனக்குள் வாழ்கின்றன
என் எதிர் பார்ப்புகளின் இலட்சசியங்களில்
ஆரம்பமாகும்
திசைகாட்டும் கப்பலைப் போல் ..!
என் வீட்டும் பூனைகளும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக