ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பெண் பூவை வாழ விடு.....!




மண்ணோடு 
மண்ணாகிப் போகும் 
இந்த மனித நேயம் -
பயிர்களுக்கு
உரமாகத் துடிக்கின்றது ..!
காம வெறிபிடித்த குண்டு விதைகள்
பெண் பூக்களின்
உயிரிதழ்களைத் தேடுகிறது
இறை படைப்பில்
நிறம் மாறாத
குருதிக்குள்ளும்
ஏன் இத்துனை வேற்றுமைகள் ...?
மனிதனை
மனிதன் கொல்லும்
கொடுமைச் செயலை
எந்த தலைமைத்துவத்தின்
ஆட்சியில் -
முற்றுப் புள்ளி வைக்கப்போகிறார்கள்...?
மரணத்திற்கு அத்திவாரம்
கொலை .களவு .கற்பழிப்பு
துப்பாக்கிச் சப்தம்
இந்த கொடுரம்
எம் மண்ணில் எதற்கு ...?
பொறுமையாய் வாழும்
பெண்புறாக்கள் 
செத்துப் போகட்டுமென்றா .?
ஊமையாய் வடியும்
மனிதப் பிணங்களில்
வெள்ளைப் புறாக்கள்  நீந்தட்டும் மென்றா ...>
மண்ணோடு மண்ணாகும்
மனித நேயமே !
உன் நிழலிலாவது
பெண் பூவை வாழ விடு
சுத்தந்திரப் பூவை
மணக்க விடு ..!
சமாதனம் தேடும் இதயங்களாவது
மானத்தை காக்கும் பெண்களாவது -அதனை
முத்தமிடட்டும
எமது மூதாதையர்
மூளையுடன் நடந்திருந்தால்
எம் பெண்கள்
மானம் இழந்திருக்காது
எமது கால்கள்
இன்று
சருகு களாயிருக்காது
சிந்திய குருதிகளை
சேகரித்து -
கவிதையெழுதும்
எம்முயிருக்கும் -
என்ன உத்தரவாதம்
உணர்வுகள் வரண்டு
நிம்மதியின்றி வாழும
எமக்கு
என்ன 'நாமம '
தெரியுமா ?
காலத்தால் மாறாத
மனித நேயங்களின்
அகராதியில்
நாம்
'அகதி' என்று ...!
அல்லது
பிண மென்று ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக