திங்கள், 15 செப்டம்பர், 2014

வரமாய் தந்திடுவாய் ...!



போற்றிப் புகழப்பாடுகிறாய் - என்பதை
அல்லாஹ் நானறிவேன்
தொழுகை சுஜுதினில் – அல்லாஹ் 
மனமுருகியான் தூஆ செய்திடுவேன்....!

உன்னருள் சுரப்பினால் –  உலகம்
குளித்து சுத்தமாகிறது
பாவக்கறை அகற்றிடவோ - சுவாசத்தை
விட்டு அகன்றோடுகிறது.....!

துன்ப துயரங்களை – அகற்றி
உற்றெடுக்கும் ஸம்ஸம் கிணறோ 
உள்ளமெங்குமே – பரவி
இயற்ககைச்சுகம் தருவது 

அருள்மறை திருக்குர்ஆன் - ஓதி
கல்பு மகிழ்கிறது
நன்மை தான் சொறியுமது? – பரக்கத்
பொங்கி நிறைகிறது....!

பொறாமை மறைகிறது - பொறுமையோ
உள்ளத்தில் சேர்கிறது
சாதி வேற்றுமையகன்றே - என்னுளம்
நபிவழி வாழ்கிறது!

உன்றன் நிலையில்லா – வாழ்வில்
மறுமையின் பின்னலே
என்றன் கல்புக்கு - அல்லாஹ்வே
வரமாய் சுவர்க்கம்தந்திடுவாய் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக