திங்கள், 15 செப்டம்பர், 2014

யார் பறிப்பது .....?



கவிதை
எழுத்தாளர்களின் சிந்தனைத் துளி 
நான் வேர்
நீ -
ஈரமண்
நகர்த்தி நகர்த்தி ஆலமரமானேன் நான்!
.
பாக்கள் வடித்தால்
கவிதை பூக்கும்
உன் வதனத்து வரம்புகளில்
கவிதை
தேனாக இருந்தால்,
ஊரிஞ்சிக் கொண்டே இருப்பேன்
பூவாக இருந்தால்,
மணந்து கொண்டே இருப்பேன்
என்றது களை வண்டு .
கவிதைகள் பூப்பதை யார் பறிப்பது ?
பாக்களை நுகர்ந்த பின்
துன்ப துயரங்களை எழுதிக் கொண்டு
கால நேரத்தை கடத்தினால் கூட,
மனசு வலிக்கவில்லையே
வேதனை சுமந்தால்
பாரம் கூட பாக்களாய் வடிந்து விடுகிறது .
கவிதை
கருங்கல்லுக்குள்ளும்
ஈரமிருப்பதை காட்டி விடக் கூடியது ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக