வியாழன், 4 செப்டம்பர், 2014

நயமடைவார்



ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின்
படி ,செயலாற்றுகிறான் -ஆம் !
இவ்வுல காலமும் இறைவனோ நாம் செல்லும் 
பாதையை மாற்றுகிறான் .
மனதின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி கெடுவான் - எக்
கணத்திலும் மனதை கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான்....!
முரணான வழியில் இன்பங் காண
முனைகிற மனத்தாலே - மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்
தன் சிறு குணத்தாலே...!
மனமோ ஆன்மாவுக்குள் இருக்கும்
சுதந்திரப் பொருளாகும் - அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால்
துருபிடித் திருளாகும்...!
மனதைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் - நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக