வியாழன், 4 செப்டம்பர், 2014

அறியாது புரியாது



மனிதர்கள்
தேனீர் குடித்து தாகத்தை தீர்த்துவிடுகின்றார்கள்
குருதித் துளியென்று 
அறியாது
புரியாது ....!
கரங்கள்
சோர்ந்து விடுவதற்குள்
அட்டைகள் -
உறிஞ்சியெடுத்து விடுகின்றது
உயிர் துளிகளை .....
.
பணம், பொருள், சொத்து ,
தேடியழைகின்றார்கள்
கூடவே வைத்து கொள்வதற்கு அல்ல ,
வாழ்கையை -
வாழ் நாளை
இழந்து போவதற்காக
பாவத்தை
சுமந்து செல்வதற்காக....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக