வியாழன், 4 செப்டம்பர், 2014



யாவரும் கேளீர்
சாதி ,மத பேத மின்றி
சரி சமமாய் மனிதர் நாம்
மேதினியில் ஒரு குடியாய் 
மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம் !
செறிய குருவிக் கூ ட்டமெல்லாம்
சேர்ந்து இனிதே வாழ்கையில்
அறிவிற் சிறந்த மனிதர் நாமும்
அழிவுப் பாதைசெல்வதா ..?
உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம்
ஓடும் குருதி ஒரே நிறம்
கலகம் பண்ணிக் கடிந்த துவாழ்தல்
காட்டு விலங்கின் இழி குணம் !
பிறப்பில் மனிதர் எவரு மிங்கு
பெரிது சிறிது இல்லையே
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச்
சி ந்தையாலே உயருவர் !
பழிகள் செய்து பாவியாகிப்
பாரில் வாழ்வோர் சிறியவர்
தெளிந்த அழிவு அன்பினோடு
சேர்ந்து இனிது வாழ்வோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக