புதன், 5 ஜனவரி, 2011

புயல்!!

சகீ...
நகரும் பாதங்களின்
நெடும் பயணத்தை
விசாரித்துக் கொண்டிருக்கிறாய்  
நீ...

போ...
போய் கொண்டே இரு...!
எத்தனை தூரம்
உன்  பயணம்
தொடருமென்பதை
அறிய வேண்டும்
எதிர்பார்ப்புக்களெல்லாம்      
ஏமாற்றங்களாகிப் போன
உனக்காகவா...
நான்
தவமிருந்தேன்..?

என்
தாகத்தின் அவஸ்த்தைக்கு
ஒரு துளி நீர் ஊற்றுவாய்
என்றெண்ணிய என்
எதிர்பார்புக்களை
வெடித்துச் சிதறும்
இந்தோனேசியாப் பூமியாய்
மாற்றுகின்றாய்
என்னையும்...
என் எதிர்பர்புக்களையும்

இம் மண்ணில்
நீ!
நினைத்த படி வாழ்!
ஆனால்
என் வாழ்க்கை பயணத்தில்
புயலாய்  மட்டும் மாறி விடாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக