வியாழன், 6 ஜனவரி, 2011

தூசாய் மாற்று!!!!!!!

சமாதானமே! நீயொருக்காய் தென்றலாய்மாறு
அராஜகமாம் அடாவடித்தனத்தை தூசாய் மாற்று!
இப்பூமியில் உன் ஈரநெஞ்சம் காட்டு
புலர் பொழுதில் துயரங்களை சம்பலாகிக்போடு!

பாலகரை கடத்தி நிதம் பணம் கேட்டு
மிரட்டுகின்ற படுபாவி! இதயங் கொண்டு
வாழுகின்ற கொள்ளையர் தம்மை! வாட்டு
வேதனையுற்றிருக்கும் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கூட்டு!

உடமைகளை சுருட்டுவோரை நண்பர்களாக்கி
நல்லவர்களுக்கு அவமானப் பெயரிட்டு
மணமாரும் இதயங்களுக்கு தீயையூட்டும்
அகிலமெங்கும் உண்மைக்கு சுடரைக் கூட்டு!

எரிக்கப்பட்டு   புதைக்கப்பட்டு இவ் உலகில்
உறவிழந்து வாழுகின்ற நாட்டு மக்கள்
நிம்மதி பெற்று உன்னாலே! கவலை மறந்து!
சுதந்திரமாந்தறாய் வாழ்ந்திடவுன் அருளினைக் கூட்டு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக