சனி, 8 ஜனவரி, 2011

சரித்திரம் அல்ல தரித்திரம்!!!

வரட்சியில் துடிக்கும்
வாலிபத்தின்
மனித நேயமே!
இங்கு-
பாலைவனம் மட்டுமா
வரண்டு  போயின...?
 என்இளமையும்  தான்!
"நா"தவிக்கலாம்
எம்
வலிபமுமா ..?

நிம்மதியை தொலைத்து
இளமையை இழந்து
முகாம்களில் -
அடக்கிலம்  மடைந்து 
உறவுகளைப்  பிரிந்து
அகதிகலாக்கப்பட்டோம்!

வாழ்க்கையே
சஹாராப்பாலைவனமாகிவிட
உஸ்ன நினைவுகளால்
நாம் துடிக்கிறோம்!

எரியும் சுடராக
மனம்-
வேதனை நெருப்பில் சங்கமிக்க
உடம்பில்-தவண்டு  விளையாடும்
உயிர்
புகையாகமாறிக்கொண்டிருக்கும்


எம் வாலிபங்கள்
முதுமையாகிப் போக,
குருதித் துளிகள்-
சிதறிப் போக,
நாங்களென்ன
கருங்கல்லா..?
உணர்ச்சியின்றி கிடப்பதற்கு..!
சந்தோசமின்றி வாழ்வதற்கு

எம் அவலக்குரல் ஓசை
படைத்தவனுக்கு-
கேட்காமளிருப்பதற்கு 
நாங்களென்ன
மீஸான் கட்டைகளா?
அல்லது
உறுகிப்போட்ட
இரும்புத்துண்டுகளா?
உரிமைகள் இழக்கப்படுவதற்கும் 
உடமைகள் எரிக்கப்படுவதற்கும்
உணர்வுகள்-
-புதைக்கப்படுவதற்கும்
மனித நேயத்தின் வாலிபம் -தானா
தேவைப்படுகிறது...?

எம்-
உடலில் நிழலாடும் மூச்சுக்கள்
எதிர்கால சமூகத்தினருக்கு-
சரித்திரம் மட்டுமல்ல!
எம்
சந்தயினரின் தரித்திரியமும் தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக