ஞாயிறு, 1 மே, 2011

இது சத்தியம்...!!!

எங்கள்-
வாழ்க்கைப் பாதையை
வழி மறிகின்ற,
தோல்வி பாறாங்கற்கள்!!
பாதங்களை நகர்த்த
முடியாத தடங்கள்....

எங்கள் சப்தங்கள்
உங்கள் காதுகளில்
விழுகிறதா...
முதலாளிவர்க்கமே??

விடாமுயற்சி தான்-
எங்களின் வேலை..!!
நாளைய தசாப்தங்களில்
எங்கள் சந்ததிகள்
நிச்சயமாக
உங்களின் அடிமைகள்
அல்ல...!!அல்ல...!!

சோதனை மலர்கள் நாம்...!
தேனைப் பருகும்
அக்கினி வண்டுகள்நீர்...!

நாம் அனாதைகளல்ல
பரம்பரை பரம்பரையாய்த்
தோல்விகளைத்
தோழர்களாக்கிய...
உண்மை ஜீவிகள்...!!!

சத்தியமிட்டுச் செல்கிறோம்...
தொடர்கதையாய்
எழுதப்பட்ட தோல்விக்கு...
இனி-
முடிவுரை எழுதப்பட்டே தீரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக