செவ்வாய், 10 மே, 2011

மருந்து

என்ன நோய் என நினைத்து
குருதி பரிசோதனைக்காக;
சாப்பாடுகளின்றி பத்தியம் காத்திருந்தேன்.

நோய் பரவலாகவும்
உடம்பு சோர்வாகவும்
கலந்து கொண்டிருந்தன.

வேதனை தொடரக் கூடாதென
மருத்துவமனையில்-
அனுமதிக்கலானேன்.

மருந்து-
பல நிறங்களில்
குடிக்க ஆரம்பித்தேன்.

குடித்து முடிந்த உணர்வுகளில்
மட்டும் எண்ணற்ற
நிலைமைகள்-மாறிக் கிடந்தன....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக