புதன், 11 மே, 2011

அது தானே....!!!

கொதிக்கும் மனதில்
ஆறுதலான தடவல்..!

நீ...,
தூவும் எரியும் வெயிலில்
நான்-
பாதம் பதிப்பதா....?????
அல்லது-
பாதத்தைக் காப்பதா....????

சஹாராப் பாலைவனமான
பூமியின் சூட்டில்
தவிக்கும் நாவின்
தாகம்
எனதானது...!!!

புரிகிறதா தோழி;
மனதின் வேதனை...!!!
உயிர் ஊசலாடும் வரை
ஈழத்தின் போராட்ட அவஸ்தையாய்...!

இதோ...
எனது விருப்பம்
கடற்கரையின் ஈரமணலை
ஊட்டி....ஊட்டி...
மண் வீடு கட்டி உதைக்கும்...
சின்னக் குழந்தைகளின்-
விளையாட்டுத் தானே
என் இதயத்தின்
மகிழ்ச்சி....!!!

யார் சொல்வார்...??
பாச இருளின்
 வெளிச்சத் தடவலை....????
சுனாமியின் வரவு
தந்த உறவு தானே-
உனதான உயர்வுகள்...???

எண்ணிப் பார்த்து விடலாம்
துட்டுக்களின்
எண்ணிக்கையென்றால்
இது...
உதிரங்களின் உதிர்வுகளாயிற்றே-

என்ன செய்வதாய்
உத்தேசம்....?????
யோசித்துக் கொண்டே இரு!!!
கிடைக்கும் உனக்கு
மன-ஆறுதல்
அது தானே
.நொந்து சருகாகும்
என் இதய இழையின்
எதிர்பார்ப்பு!!
தோழி....,
இப்போ-
புரிகிறதா உனக்கு.....!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக