செவ்வாய், 10 மே, 2011

உரிமை தந்தாய் நீ.....!!!!

என் உடலின்  உறுப்புகளுக்குள்
நிறைந்திருந்தன
உனது நினைவுகள் கலந்த
உணர்வுகளின் நிழல்கள்...!!

பாசத்தோடு
மனதின் சந்தோஷங்களை எங்கோ
தூறல்களாக கசியவிட்டு
நினைவுகளோடு கலந்து இருக்கிறது
மனசு...

இதயம்
பாசத்தை சொரிந்து
அன்பினை பரிமாறிக் கொள்கிறது.
எனக்கு பிடித்த உன்னை
உயிராய் கலக்கின்றது.

நட்புடனே
பாசத்திற்கு மலர்ந்த உன்னை
இதயம் போற்றிப் பாடுகிறது.

பனித் துளிகளைப் பீச்சி
மனதை ஈர நெஞ்சமாக்கி வைக்கிறது
மறக்கமுடியாத
உன் பாச அரவணைப்பு....
இதயம் கொடுத்து
உரிமை தந்தாய் நீ.....!!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக