சனி, 14 ஜனவரி, 2012

உன் நினைவுகள்!!!!.

விரக்தியாகிப் போன
மன வேதனைகளுடன்
காத்துக் கிடக்கிறேன்
காலமெல்லாம்!

உன நினைவுகள் நிழலாடும்
ஒவ்வொரு நிழல்களும்
தடவிச் செல்கிறது - ஆனால்
உன்னை நேசித்த நான் மட்டும் தான் இன்னும்
உனக்காக தவம் கிடக்கிறேன்!
.
இதயங்களின் உணர்வுகளோடு
சுவாசிக்கும் மூச்சுக்களாக
நகர்ந்து.....நகர்ந்து...செல்கிறது
உனது ஞாபகங்கள்
.
செழித்து மலர்வதற்கும்
மலர்ந்து வாடுவதற்கும்
இழையுதிர் மரமாகிப் போனதா
இந்த பரிசுத்த இதயம்!

தாகத்தால் நா வரண்டாலும்
உடலின் வியர்வைத் துளிகளால்
ஈர மாக்கும் இதயம்
மறக்க நினைத்தாலும்
மறவாது வாழும் இதயம்.

கல்லாகிப் போனாலும் - காதலை
குளிர வைக்கும் இதயம்
தினம் தினம்
கண் சிமிட்டல்களாய்
உன் நினைவுகள்!!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக