சனி, 14 ஜனவரி, 2012

அனலாய் கொதிக்கும்
கடற்கரை மண்ணில்
சிலந்திவலை பின்னலாய் பின்னிக்கிடக்கும்
அடம்பங்கொடியை பிடுங்கிபிடுங்கி
பழகிப்போய் விட்டது
மனசு ...!

இ ங்கே :
பயங்கரவெயிலில் வடியும்
வியர்வைத் துளிகளினுடே:
சோகமாய் _
வந்து போகும்
தாகமும் ..!
துயரமும் ....!!

தொல்லைகளின் _
வேதனைச் சுமைகள்
பாரமாய் வந்து குவிகையில்...

நிம்மதி மூச்சு தடைபடும்
சுவாசங்கள் ...:
சளித்தொல்லைகளாய் ..:
சனியன் தொல்லைகளாய் ..:

நாட்டின் நடப்புக்கள் இன்று
விலையேற்றத்தின் உயர்வினை
குறைத்துக் கூட்டும் ..!
கழித்துக் காட்டும் ..!!

தேர்தலில் _
வாக்குபறிக்க
போலி வார்த்தைகளை
செயலாய் காட்டும்
வீண் பேச்சுக்கள் ...!
போலி வார்த்தைகள் ...!!

ஏழைகளின் _
வேதனைச் சொற்களை
தூசுகளாய் தட் டிவிடும்
திமீர்பிடித்த மனசுகள் ...!
பணம் படைத்த இதயங்கள் ...!!

வறியவர்களின்
உரிமைகள் போட்ட
வாக்குக் கூட:
தெரியாமல் போய்விட்டது ..!
காணாமல் மாறிவிட்டது ..!!

ஏழைகளின் மனசுகள்
ஏங்கித் தவிக்கும் ..!
கூட்டில் அடைத்த பறவைகளாக ...!
திசையறு கருவியற்ற கப்பலாக ...!!

எதிர் பார்த்த கனவுகள்
ஏமாற்றங்களாகப் போனது ...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக