சனி, 12 நவம்பர், 2011


இலக்கியத்தில் இலங்கி விடு
இகமதிலே சிறந்து விடு
பல நூறு பாக்கள் படைத்துப்
பாவலனே அஸ்மி மகிழ்ந்து விடு ..!

... செந்தாழப் பூ மணக்கும்
செந்தமிழால் வாய் மணக்கும்
மந்தாரப் பூப் போல அஸ்மி
மானிடர் கை கொட்டிடுவார்

பாவலனே .! நீ வித்திட்ட
பா மணிகள் பல நூறாய்
இத்தரையில் இதழ் விரிக்கும்
முத்திரையாய் முகம் சிரிக்கும் ..!

பொன்னாடையும் போர்த்திய நீ
புகழ் கோடி பெற்றனை நீ
பற்றுதலாய் உன் மீது அஸ்மி
பாசத்தை பொழிபவள் நான்..! (சகோதரி)

பொத்துவில் (அஸ்மியே )
அகிலத்தின் நல் இதயமே ..!கவியே ..!
என் பா மலர் தூவும்
இனிமையான வாழ்த்துக்களை ஏற்றிடுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக