வெள்ளி, 11 நவம்பர், 2011

என்னுயிர் தோழி,
உன்னால்......
வானிலிருந்து பொழியும் மழைத்துளிகளை
தடுத்து நிறுத்த முடியுமா ...?
உதிக்கும் சூரியனை _
... மறைக்க முடியுமா ...?
இரவை பகலாக்கி
பகலை இரவாக்க முடியுமா ...?
கரையை முத்தமிடும் கடலலையை
நிறுத்த முடியுமா ..?
வானத்தை பூமியாக்கி
பூமியை வானமாக்க முடியுமா ...?
அப்படியாயின்
எப்படி ......
நான்
உன் மீது சுரக்கும்
என் தூய அன்பை
உன்னால் தடுத்து நிறுத்த முடியும் ...?
பிரித்துப் போட முடியும் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக