சனி, 12 நவம்பர், 2011

எழிலுரு இலங்கா புரி நின்று - புனித
இஸ்லாம் மறை சொல்! கடமையினை
இனிதாய் இங்கே நிறை வேற்றி - வந்த
இறையோன் ஹாஜிகாள் வருக...!

... வெள்ளையுளத் தெளிவோடு - மண்ணில்
விளங்கும் பக்தி நெறியோடு !
கொள்ளை அழகு மக்காவில் - வந்து
குவியும் ஹாஜிகாள் வருக....!

அண்ணல் நபியின் சியாரத்தை - உயர்
அருமை மதீனா நகர் தன்னில்
கண்ணால் கண்டு மனந்துதிக்க - வரும்
ஹாஜிகாளே வாருங்கள்...!

அரபா பாலைவனத்தரையில் - மனக்
கறைகள் அகலப் பிராத்தித்து;
இறைவன் வீட்டைத் தரிசித்தே - நன்கு
இலங்கும் ஹாஜிகாள் வருக...!

"சபா மர்வா"மலையிடையே - எழு
தடவை ஓடி தொங்கோட்டம்
"ஸம் ஸம்" தண்ணீர் தனையருந்தி - வரும்
தூயஹாஜிகாள் வருக....!

இப்ராஹீம் நபி செய்த தியாகத்தை - எண்ணி
தல்பிய்யா ஓதிய ஹாஜிகளே!
என்றும் இறையோன் துதிபாடும் - நல்ல
இலங்கை ஹாஜிகளே வருக....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக