திங்கள், 25 மார்ச், 2013

நயமடைவார்


ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின் 
படி ,செய லா ற்றுகிறான் -ஆம் !
இவ்வுல காளும் இறைவனோ நாம் செலும் 
பாதையை மாற்றுகிறான் .

மனத்தின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி கெடுவான் !-எக்
கணத்திலும் மனத்தை கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான் !

முரணான வழியில் இன்பங் காண
முனைகிற மனத்தாலே -மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்
தன் சிறு குணத்தாலே !

மனமோ ஆன்மாவுக்குள் ளிருக்கும்
சுதந்திரப் பொருளாகும் -அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால்
துருபிடித் திருளாகும்!

மனத்தைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் -நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக