திங்கள், 25 மார்ச், 2013

சோகம் சுரந்த கோபம ...!
வாழ்வில் 
பிரச்சினைகளை விட்டு மாறிச் செல்வதை விட , 
வேறு வழி புரியவில்லை ..!

எல்லா விதமான தொல்லைகளையும் 
அகற்றி விட்டால்,
வாழைப்பழத்தை விட மென்மையானது 
இதயம் ..!

நீ-
செய்வது தான் சரியென்று நடந்தால் ,
நாயின்வாலை நிமிர்த்த முடியுமென்றசெயலாகும் ..!
நான் -இனி
விலகித்தான் போக வேண்டும் ..!
வி!ளங்கித்தான் ஆக வேண்டும் ..!

சோகம் சுரந்த கோபம்
என்னுள்ளே நினைத்துப் பார்க்கலாம் .!
உனக்காக மனம் திருந்தி வருவாளென்று
நீ ,
நினைத்துப் பார்க்கலாம் .!
பாசவுள்ளம்சாம்பலாகிப் போனது ..!!

உன்,
தொல்லைதரும் நிகழ்வுகள் ...
எனக்குள் வந்து நிழலாடும் போது ....,
தீயாய் எரியும் விறகுகளாய்
என் ஆத்மா
எரிந்து கொண்டிருக்கிறது ..!
புகைந்து கொண்டிருக்கிறது ..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக