திங்கள், 25 மார்ச், 2013

ஒரு பெரு மூச்சில்விழும் காட்சிகள் !

விழிக் குளங்கள் 
கண்ணீரை இறைக்கும் !

விசனமில்லாத 
முகங்களுக்குள் 
விஷமேறிய தோள்களாக
சில முகவரிகள் ....!

கிடைக்காத போதும்
கிடைத்த பொழுதும்
கேள்வியையே
வெளியிடும்
மூச்சுக்குள் ...!

பாலையும் நீரையும்
பகுத்தறிந்து
நோக்கும்
அன்னமும் இதுகண்டு
அலறித்துடிக்கிறது ..!

ஓ...,
அந்த இருளுக்கும்
வேலையில்லை
மனிதர் மனங்களில் தான்
குடி கொண்டது ..!

கொடுமையும்
கொடிய பார்வையும்
என்னில்படுவதனால்
என் விழிகள்
என்றுமே ......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக