திங்கள், 25 மார்ச், 2013

கரையான்களாய் அரிக்கும் மனசு .....

பழுதுகலாக்கி விட்டு 
சங்கிலித் தொடர்களாய் -
சந்தோஷம் கொண்டாடும் ..!

ஆனாலும் -
தூசுகளிடமிருந்தோ ....
தூள்களிடமிருந்தோ .... 
எனக்கு -
எந்த வியாதிகளும்
தடவித் தரவில்லை அவை ...!

பார்த்தாயா.....?
எறும்புகளின் அந்த ஒற்றுமையை ..?
கண்களில் பட்டதா ...?
ஒன்றோடு ஒன்று சந்தித்து முத்தமிடுவது ....?
மழை தூவுகிறது -
பொந்துகளில் ...!

அறிவு படைத்த மனிதன்
யோசித்த வண்ணம் இருக்கிறான் ...!

சாதி மத பேதங்களில் .....
மானிடர் வாழ்வு
போராடுகிறது ...!

சொத்து சுகங்களில்
உயிர் -
பலியாகிறது ...!

உறவுகளின் போராட்டத்தில்
மனிதம் -
அழிகின்றது ...!

பகைவர்களின் எதிர்ப்புக்களில்
உரிமை -
இழக்கப்படுகிறது .....!

தோழியின் மனம் ,
ஏறும்புக் கூட்டங்களினூடே நகர்கிறது ...!

இதயத்தின் ஏக்கங்களோடு,
மனிதர்களின் செயல்களோடு -
காலத்தின் தரிப்பிலே ......!
மனிதர்களின் பகையிலே .....
துயரத்தின் உணர்வுகள் ....
உணர்வுகளின் தாக்கங்கள் ....

இடிபோல
முழங்கியெழும்....!
பட்டாசு போல
சிதரிப் போகும் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக