திங்கள், 21 பிப்ரவரி, 2011

மருமகள் வர வேண்டும்!

அன்புள்ள மனம் கொண்ட மங்கை
அழகான குணம் கொண்ட தங்கை
பண்புடனே வாழுகின்ற பாவை
படிந்த வளாயிருக்கின்ற பூவை
என்றனுக்கு மருமகளாய் வேண்டும்
இறைவனதை வரமாய்த் தர வேண்டும்

கணவனுக்குத்  தொண்டு செய்யும் முள்ளம்
காரிகைக்கு இருந்திடலும் நல்லம்
குணவதியாய் குடும்பத்து விளக்காய்
கோதை யவள் விளங்கிட வேண்டும்
அனைவரையும் கவர்ந்து விடும் நல்ல
அன்பு மிகு மருமகள் வரவேண்டும்!

நாலு குணம் கொண்டிருக்க வேண்டும்
நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும்
வாழுகின்ற போதினிலே குடும்பம்
வழி நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்
சீல குணம் கொண்டிருக்க வேண்டும்
சிறப்பான மருமகள் வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக