திங்கள், 21 பிப்ரவரி, 2011

அறிவாள் உணர்க!

அரபு நாட்டின் வெம்மையிலே!
அனுதினம் வெந்தாய் பணத்துக்காய்!
இரவும் பகலும் ஓயாது
இயந்திரம் போலே நீயுழைத்தாய் !

விறகாய் அங்கே நீ யெரிந்தாய் !
வீட்டில் அடுப்பு எரிவதற்காய்
உறவைப் பிரிந்தாய்.உயிரென்று
ஒம்பும் கௌரவம் அங்கு தீர்த்தாய்!

மண நாள் "மாலை"வாடு முன்னர்
வானிற்  பறந்து நீ சென்றாய்:
பணந்தான் வாழ்க்கை என்றெண்ணி:
பைத்திய மானோர் பலருண்டு:

துணையே! பணமும் வாழ்க்கைக்கு
துலங்கும் அறிவால்!நீயுணர்க!
இணையே!இல்லா!வாழ்க்கையிலே
இன்பம்!அன்பு உறவன்றோ!

தாழித்  தங்கம் விற்றே நீ!
தாவிச் சென்றாய் பொருளீட்ட
வேலியில்லா மனத்  தரையில்
விதைத்தாய் நீயும் பேராசை

கேலிக் கூத்தாம் உன் வாழ்க்கை
கிடைக்கும் பணத்தால்!கிடைக்காது !
பாழாய் போன இளமை சுகம்:
வருமோ! மீண்டும் நீயுணர்வாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக