திங்கள், 21 பிப்ரவரி, 2011

மாமிக்கு வேண்டிய ம(று)ருமகள்!

அழகுக்கு  ஓருருவாய்  அவனியிலே!
அமைய வேண்டும் எனக்கு மோர் மருமகளே!
பழக்கத்தில் பெருந்தன்மை சொலிக்க வேண்டும்;
பண்பாட்டை மறவாது நடத்தல் வேண்டும்!

கற்றறிந்த பெண்மகளாய் இருத்தல் வேண்டும்-கணவன்
கருத்தறிந்து விருந்தளிக்கத் தெரிய வேண்டும்;
பற்றோடு குடும்பத்தைப் பேண வேண்டும்;
பத்தினியாய் குலமானம் காக்க வேண்டும்;

சண்டையோடு சச்சரவைத் தவிர்க்க வேண்டும்;
சாடை,கோள் இழிவுரைகள் விலக்க வேண்டும்;
தன்னொளிரும் வெண்ணிலவாய்த் திகழ வேண்டும்;
தன் பதியைத் தெய்வமென மதிக்க வேண்டும்;

குணத்திலுயர் குன்றாக நிற்க வேண்டும்;
குற்றங்கள் தனைபொறுக்கு முள்ளம் வேண்டும்;
பணமிருந்தும் திமிரில்லா திருக்க வேண்டும்;
பாசமலர் இதய(ம்) மணம் வீச வேண்டும்;

பெண்மையதன் குணமனைத்தும் ஒருங்கே வேண்டும்;
பேரழகுப் "பேரர்"கலைத் தரவும் வேண்டும்;
மண்ணகத்தில் எனகேற்ற ம(று)ருமகளாய்;
மாமியென்னைத் தன் தாயாய் மதிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக