வியாழன், 9 மே, 2013



ஒழுங்கின்றித் தருபவரும் 
பிழைப்பிற்கு வழியற்றுப்,
பெரும் பாவம் புரிபவரும் 
சளைக்காமல் வாழுகின்ற 
சந்தோஷ நேர முண்டு !


நாளை வரும் என்று மனம்
நம்பிக்கை கொண்ட தெலாம்
பழாகிப் போன தந்தோ
படித்திட்ட மாந்த ரெலாம்
ஏழைகளை எந் நாளும்
எரிச்சலுடன் நோக்குகிறார் !


நாட்டிற்கு முது கெலும்பு
நா மென்று வார்த்தைகளால்
பாட்டிசைத்து வாழுகின்ற
பாவிகளே எங்களது
வீட்டிற்கும் பணம் தேவை
வியர்வைக்குப் பணம் கொடுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக