வியாழன், 9 மே, 2013








என் உள்ளத்து உணர்வுகளில் கசிந்து
ஊற்றாய் சுரக்கின்றது கவிதை !

எழுத்துக்களின் எண்ணிக்கைகளுடன்
போராடிக் கொண்டிருந்தேன்!

இப்போதான் மனசு ஆறுதலடைகின்றது
பேனா -
சுமைகளை சுமப்பதால் !

நிம்மதி தேடி நிம்மதி தேடி
அலுத்துப் போய் அழைக்கிறேன்!
உலகம் -
என்னைப் பார்த்து சிரிக்கின்றது
நான்
உலகத்தைப் பார்த்து சிரிக்கின்றேன்

கண்ணெதிரே பெண்களின்
பெண்மை தொலைகிறது
அவமானம் நடக்கின்றது



பொறுமையை இழக்காதே
பொறுமையலாருடனே-
அல்லாஹ் இருக்கின்றான்


பெண்ணின் பெருமையைதாங்கியே
உலகம் -
பெருமைபடுவதை காண்கின்றேன்


இன்னும் !இன்னும் !

பெண்மை பாதுக்காக்கப் படவேண்டுமென்கிகின்றது
புனித மறை

பெண்மை
எப்படியென்று புரிந்தாயிற்று !
நல்லது கெட்டதுஅறிந்தாயிற்று !!
அல்லல்களும் அவமானங்களும்தெரிந்தாயிற்று !!!

இனித் தான்
தைரியமாய் தலை நிமிர்ந்து வாழப் போகின்றேன்

வாழ்க்கையை
மனசு கற்றுக் கொண்டது
பெண்மை உணர்ந்து கொண்டது !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக