வியாழன், 9 மே, 2013



கலையுலகப் பயணத்திலே -சகீ உன்றன்

அன்பினைப் பெற்றிருந்தேன்

பிறந்த மண்ணிலே உன்றன் கரம்

பிடித்து நடந்திடக் கற்றிருந்தேன்


தடுத்தடுமாறி நடந்தவுடன் -உனக்குநான்

தொல்லை தந்து வந்தேன்

குதலை மொழிபேசியவுடன் உன்னருள்

போதனையைக் கற்றுத் தந்து விட்டாய்



உயிர் மூச்சின் மேலாய் - என்னைத்

சுவாசித்துப் பார்த்தவள் நீ

உனக்கும் எனக்கு முள - உறவை

எப்படிச் சொல்லி அழைப்பது ?



எனக்கு தோழியானால் -என்ன

என்றும் நீ ஆசானல்லவோ?

காலத்தின் நகர்வினைப் -மறந்து

உயிரென நேசித்திட வேண்டுமம்மா?



மனதிலே பாசம் ஊட்டி -உள்ளத்து

உணர்விலே நேசம் காட்டி

இதயமென இடம் -தந்தே

உரிமையுடன் உறவாடச் செய்வாய்


கண்ணுக்கு எட்டாத தூரம் வரை -வாழ்க்கை

மாறிடும் நானறிவேன்

சுடராகி என்னுயிரே -தினமுமே

சூரியனாய் வந்துவிடு அதுபோதும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக