வியாழன், 9 மே, 2013




சுடு காட்டுத் தணல் வீசும் 
இந்த பெண்ணிணத்தின் அக்கினிக் கிடங்கை 
இன்னும் நாம் காவிக் கொண்டு 

பெண்ணினத்துக்கு 
பயவுணர்வுகள் உரசுவது 
இந்த சில வலிசல்கலால் தான்

கையினில் -
உயிரைப் பொத்தியும்
ஏதோவொரு அத்தரிப்பில்


சதை சப்பி உமிழ்ந்து
குதறுவதான கனாக்களோடு
புரளுகிறது இரவுகள்


மீந்திருப்பவைகள்
விழி நீர்க் கசிவுகளும்
மாயைகளுமாய் .....

ஒருமித்துப் போராடுவோம்
இனி
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையேல்
நிம்மதிக் காற்றினை
உள் வாங்கிட -
அண்ட வெளிசென்றாவது
முண்டங்கலாக்கிடபயிற்சி பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக