புதன், 26 ஜூன், 2013




துயரத்தின் நெருப்பு அனலாய்பட்டுத் தெரிக்கும் மனசுகளில் 
மௌனம் -
தலை விரித்து கோலமிடும் !
கோலமாடும் !!
கோலம்போடும் !!!

உள்ளத்தின் உணர்வுகள்
ஆசைகள்
எதிர்பார்ப்புக்கள்

நிம்மதியை
சந்தோசத்தை
அமைதியை
நொறுக்கி வீசியபடி

மனக் கஷ்டத்தால்
துயரச் சுமைகளால்
வேதனைத் தழும்புகளால்
இதய விழிகளினால்
அழுது தீர்க்கும்
வடித்துக் கொட்டும் !

நிலையற்ற உலகில்
நிச்சயமற்ற வாழ்வில்
எதிகாலம் -
கேள்விகளாய் தொடரும்
விடையற்றுப் போகும் !

அமைதியும் நிம்மதியும்
காணாமல் போய்விட்டதால்

வாழ்வே -
அகதியானதால்
முகாம்களின் வரவேற்பு
கண்ணீரை தணலாக்கும்
தணலை குருதியாக்கும் !!

அப்பாவி முகங்கள் (வயிறுகள் )
வறுமை கொடுரத்தால்
ஊமையாகிப் போகும் !

பிரயோசனமற்ற வாழ்வை
முதலாளித்துவம்
விரும்மி நேசிக்கும்
ரசித்து மகிழும் !

சமூக அரங்கில்
அகதிகள் தினம்
போற்றப் படுபவர்களால்
நினைவு படுத்தப்படும்

சுரண்டி வாழும்
மனம் -
ரசித்துச் சுவைக்கும்

அட்டை இதயங்களால்
உயிர் குருதி -
உறிஞ்சிப் போகும்

வாழ்க்கையோ
சிவப்புச் சாற்றினால்
சிதறித் தெறிக்கும் !

சடலமான (சவமான )ஆத்மாக்களின்
உயிர்கள் -
இரங்கல் உரைகலாகும்
ரூபங்கள் பிம்பமாகும் !

நாய்
நரி
காகம்
பேய்
பிசாசு
கொசு
எறும்பு
இத்தியாதி
இத்தியாதி

இவைகளுக்கு
சடலங்கள் உணவுகளாகி !

சுதந்திரத்தை புதைத்தபடி
நிம்மதி தொடர்வதாய்
வானலைகள் -
போலிக் கீதம் பாடும்
செய்தி சொல்லும் !

அகதி மனிதம் -
நிவாரணப் பொட்டலங்களின்றி
மாறும் வரை
இங்கே -
அகதிகள் தினம்
மன ரணங்களால் பதிவாகும்

வேதனைகள் -
சோக கீதங்களாய் ஒலிக்கும்!

தரித்ததிரம்
சரித்திரம் சொல்லும் !

வறுமை பூமியில்
விதை நிலமாகும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக