சனி, 28 பிப்ரவரி, 2015



சும்மா கிடப்பதுவும்
சோர்ந்தே படுப்பதுவும்
இம்மை வாழ்வுக்கே
இடராகும் !அறிவீரோ ?
என்றும் வாழ்வுதனை
எழிலாய் அமைத்துவிட
நன்றாய்த் தொழில்செய்தல்
நலமாகும் !அறிவீரோ ?
அல்லும் பகலிலும் நீ
அயரா(து )உழைப்பதனால்
தொல்லை பல நீங்கும்
துயரம் பரந்தோடும் !
கொள்ளை கொலைசெய்யும்
கொடூர மனபாங்கு
உள்ளத்தைநாடா(து)
உயர்வு தேடி வரும் !
வறுமை அகன்று விட
வாழ்வுசிறந்து விட
பெருமை வாழ்வில்வர
பொறுமையோடு உழை !
துணிவுகொண்டு உழை
சுறு சுறுப்புஅடை
கனியும் வாழ்வு -ஒரு
கனியாகி மணக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக