செவ்வாய், 27 ஜனவரி, 2015

அண்ணல் நபி பெருமானார் .....!!



மக்கத்து மண்ணில் பிறந்தே -நல்ல
மார்கத்தை வளர்தனன் மனங்களிலே !
நேயமுடன் போதனை ஊற்றினான் -படு
பாவிகளை அன்பினால் மாற்றினான் !
இஸ்லாத்தை உலகில் பரப்பினான் -கொடும்
அடிமைத் தளையினை உடைத்தெரிந்தான்!
கூலித் தொழிலை மதித்தான் -வீணே
உண்டு மகிழ்வோரைத் தடுத்தான் !
கெட்ட குணங்களை விரட்டினான் -அல்
குர் -ஆணை ஓதிக் காட்டினான் !
இவ்வுலகை :விதை நிலமென்றான் -மறுமை
அறுவடையின் மகிழ்வினை சொன்னான் !
பெண்ணின் அருமையினை விளக்கினான் -பூவையரை
வாடிடாது காத்திடக் கூரினான்!
மண்ணில் அவளொரு மாணிக்கம் -உயர்வாய்
மதித்து காத்திடக் கூ ரினான் மாந்தற்கு !
சாதி மத பேதங்களை வெறுத்தொதிக்கினான் -நீதி
நேர்மை நியாங்களையும் மதித்து நடந்தான் !
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறிடாது வாழ்திட்டான் -மனித
மனங்களின் அன்பினை வென்றிட்டான் !
அண்ணலை மதித்து நடப்போமே -இனிய
அருள் கிடைக்கும் எமக்குமே !
அருள் மறை ஹதீஸ் இரண்டும் மனிதரிடமே -அமல்களின்
சுவர்க்கம் நரகம் அல்லாஹ் ஒருவனிடமே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக