செவ்வாய், 27 ஜனவரி, 2015

இடறி இடறியே ..!



பசித்திருந்தோம் படிப்பதற்காக,
தனித்திருந்தோம்- .
தனித்துவத்தைக் காற்பதற்காக,
விழித்திருந்தோம்
விடியலுககாக ...!
ஆனாலும் ,
இன்னமும் தான் விடியவில்லை !
கருக்கலுக்குள்ளே தெரியும்
விடி வெள்ளியாய்
அடி மனதில் கனவுகள்!
உறுதியான வழியின்றி
உருகிக் கொண்டிருப்பதால்
மனங்களில்
ஊமைக் காச்சல் !
அடக்கு முறைகளில்
அடிமையாகிப் போனதால்
உணர்வலைகளில்
அக்கினிப் பிழம்பு
தெருப் பாடகனின் தகரடப்பாவாய்
எங்கள்தராதரங்கள்
தரமிழந்து போயின !
`தடைகளையும் படிகளாய் நினைத்து
நாங்கள் -
முன்னேறத் துடித்தோம்
இறுகிப் போன அந்தக் கற்களில்
இடறி இடறியே
எங்கள் பாதங்கள்
புண்ணாய்ப் போயின
நிறம் பூசிக் கொண்ட நரிகள்
நானே ராஜா வென்று
கூப்பாடு போட்டன
அரசியல் லாபம் தேடும்
பச்சோந்திக் கும்பல்கள்
எங்கள் தராதரங்களை
நிறம் மாற்றின ..!
நாற்காலியின் ஆசை சில
நலவர்களை
நயவஞ்சகர்களாக்கலாம்
நயவஞ்சகளே
நாற்காலிக்குள் அடக்கமானால்
பாவம்
அந்தநாற்காலி என்ன செய்யும் ....?
கம்பி எண்ணும் கைதிகளைப் போல
நாங்கள் -
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்
சொடிததுப் போன
விரல்களை நீட்டி விட்ட படி
சொக்க வைத்த வாக்குறுதிகள்
கையில்
சிக்காமலே போனதை
எண்ணிய படி ...!
ஏனிப்படியில்
தலைக்கணமாய் ஏறும்
ஒல்லிச் சிறுவனைப் போல்
எங்கள் வயதுகள் -
ஆண்டுகளின் நகர்வில்
ஆங்காங்கே `நரை மயிர்கள்
இன்னுமொரு தராதரத்தைப்
பெற்றுக் கொண்டதாய்
பறை சாற்றுகின்றன ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக