வெள்ளி, 18 மே, 2012

உன் அன்பு சொற்களின்
வார்த்தைகளால் நான் வாடி துடித்தபோது
நீ அடைந்த வலியை விட
நான் துடித்த வலி அதிகம் தோழி

இதயத்தில் இருப்பவளின்
வாயில் இருந்து இடறி விழும்
ஒரு வார்த்தையும்,
எரியும் நெருப்பை விட
உஷ்ணம் கொண்டது என
நான் இதயம் வெந்து
அழதபோது புரிந்தது தோழி

உள்ளத்தில் வாழும் என்னுயிரே
புரிதலின் சிறு பிழையால்,
என் இதயத்தில் நுழைந்த
உன் வார்த்தையால்
நான் துடித்த துடிப்பை நினைத்து
கண் கலங்கி, உயிர் துடிக்க அழுகின்றேன் தோழி

மன்னிப்பு என்ற வார்தையால்
எனக்கு மருந்திட உன்னால் முடியாது
என்று தெரிந்தாலும்
மனம் நொந்தது கேட்கிறேன்
மனதினை நோவினை செய்திடாதே தோழி ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக