வெள்ளி, 18 மே, 2012

என் உயிரே எனக்குச் சொந்தமில்லை .
இதய ஆழத்தில் நிறைந்து வாழும்
நட்பும் எனக்குச் சொந்தமில்லை .

காலை மாலை என்னைத்
தாலாட்டும் -
உறவும் எனக்குச் சொந்தமில்லை . !

இதயத்தில் அன்பு வைத்து
உறவாடிய
நட்பும் எனக்குச் சொந்தமில்லை .

எழுதினேன் உன் முக நூலில்
பல கவிதை

ஒற்றை ரோஜாவாய் நட்பு
பலர் வாழும்
இதய தோட்டத்தில் ..!

வேர்க்கும் சிறைகள் ! அங்கே நீ
போட்டாய் எனக்குப்
பூவிலங்கு !
அதுவும் எனக்குச் சொந்தமில்லை ...!

வாழும் உறவுக்கு
உரிமை காட்டி
போட்டாய்
தப்ப முடியாத
நித்தியப் பந்த விலங்கு !
அதுவும் எனக்குச் சொந்தமில்லை .

ஆத்மாவின் நட்புக்கு
எலும்பு உ டல் போடும்
ஆயுள் விலங்கு !

உன்னுடைய
உயிர் தோழி நானா ?
என்னுடைய
ஆசைத் தோழி நீயா ?

சதி பதியை எக்காலமும்
மரணத்தில் தள்ளி
உயிர் சாவியை இடுப்பில் கட்டி
பல்லாங் குழி ஆடிவரும்
பொல்லாத விதி !
அதுவும் எனக்குச் சொந்தமில்லை ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக