வெள்ளி, 18 மே, 2012

உம்மா...
உன் ....வளர்ப்பு
கருவறையின் பிறப்பு ..!
காற்றும் கூட...
இடைபுக முடியா....
உன் பாசம் .
என் சுவர்க்கம் !


நான்..
உயிராய் வளர...உன் வயிறு தந்தாய்..

சுவாசமாய்
உன் மூச்சு தந்தாய்

உணவாய்..
உன் உதிரம் தந்தாய்..

என் உயிராய்
நீயாகினாய்...

நானாகவே..இங்கு..
நீ மாறினாய்..!

உலகம் மறியா..நான்..
உன் வழிகாட்டலில் ....
நகர்கின்றேன் ...

உன் ஒவ்வொரு..
அசைவிலும்...
உன்னை உணர்கிறேன் !

உனக்கும் எனக்கும்..
உறவையும்... உயிரையும்
தாண்டிய...
ஓர் உன்னதப் பிணைப்பு !

அது
தாய்.. பிள்ளை என்னும்...
இறைவனின் இணைப்பு !

அவனின் ...! பிறப்பு ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக