வெள்ளி, 13 ஜூலை, 2012

சுடரொளி

- கலைமகள் ஹிதாயா றிஸ்வி -

ஆதாரமாய் ...அனுதினமும்..
பெயர் சொல்லி அழைக்கும்..உறவு ...

உயிரைத் தடவும் உயிர் ...
உள்ளத்தை தழுவும் உறவு ..

வயிற்றுக்கும் ஊட்டும் உணவு ..
உயிர்க்கும் ஊட்டும் உறவு

உடம்பை அணைக்கும் பாசஊற்று
துன்பத்தை துரத்தும் உறவு ..

செல்வத்தை தரும் அருளொளி
மனதால் . மகிழும் உறவு .

இருளகற்றும் சூரியஒளி
உள்ளத்தை தழுவும் ..உறவொழி..!

ஒளியற்ற இவ்வாழ்வை .
விழி திறந்த மனிதனாய்

சூரியனாய் பிரகாச வைக்கும்...சுடரொளி
ஒளியில்லா உலகம் விழியில்லா முகமாக
அன்பினை வடித்திடும் ..தந்தையெனும் சுடரொளி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக