வெள்ளி, 13 ஜூலை, 2012

என் இதயம்
சில -
எதிர் பார்ப்புக்களோடு
காணாமல் போய் விட்டது


பிராத்தனை பிராத்தனையாய்
பல்லாயிரம் பிராத்தனைகள்
தாயாரின் மறைவுக்குப்பிறகு..!

எதற்கும்
அழாத என்னை
அழச் செய்துவிடுகின்றது
வருந்தச் செய்துவிடுகின்றது
உறவு ..!


நான்
கடைசியாகச் தாயாரைப்
பார்த்த போது

'என்மகளை என்னோடு கூட அனுப்பி விடு’ என்று
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்துயிருந்தால்
இன்று-
நான் உன்னோடு வந்திருப்பேன் தாயே


பிள்ளைகளுக்காய் தாய் கேட்க்கும்
பிராத்தனைஅங்கிகரிக்கப் படுவதுன்டு


எந்நிலையிலும்
அழாத என்னை அழவைத்துவிடுகின்றது
வேடிக்கைப் பார்த்துவிடுகின்றது
உறவின் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக