வெள்ளி, 13 ஜூலை, 2012

யார் உன்னை நேசிக்காவிட்டாலும்பரவாயில்லை
சகீ-
உன்னை நேசிக்க உயிருள்ளவரை நான் இருக்கிறேன்

என்னை எங்கும் நீ தேடி அலையாதே நான்
உன் இதயத்தின் துடிப்பாய் இருக்கிறேன்
பாசமுடன் உன் சுவாச மூச்சுக்களாய்..!

அன்பு என்பது பகைவரை கூட நண்பராக்கும்
ஆனால்
தலைக்கனம் என்பது நண்பனை கூட எதிரியாக்கிவிடும்
அதனால்
நல்ல உள்ளங்களை மதித்து வாழ்வோம் ...!

கர்வம் காட்டும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
நோவினை கொடுக்காதே
எதையும் எதிர்பார்க்காதே...!

உன் அருகில் ,
உன் நினைவில்
உன் மனதில்
உன் வாழ்வில்
உன் அன்பில்,
உன் பயணத்தில்
எவர் எவரோ இருக்கலாம்.
சந்தரப்பவாதிகளாய் ..!

ஆனால் யாரும்உனக்கு இல்லாத போது
உனக்காக நான்மட்டும் தான் இருப்பேன்...!
நினைவியில் வைத்துக் கொள் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக