வெள்ளி, 13 ஜூலை, 2012

உடம்பின் அழுக்குகளை கழுவிக் கரையும்
சவர்க்காரம் போல்

தன்னையே தியாகம் செய்து விட்டு
சுத்தத்தை மட்டும் சுகமாகத் தந்து விட்டுச்
செல்வது - போல்

சகீ-
உன் சந்தோசம் நிறைந்த சுகங்களை எல்லாம்
நீயே வைத்துக்கொள்...!

உன் துயரங்கள் நிறைந்த சோகங்களை மட்டும்
எனக்கு பரிசாகத் தந்துவிடு

உன் உண்மையான உற்ற தோழி
நான் என்றால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக