வெள்ளி, 13 ஜூலை, 2012

ஊதி நிறைத்த
பலுனைப்போல்
மனசால் -
நிறைந்து இருக்கிறேன்,..!

என்னைத் தடவிய
காற்றினை முத்தமிட்ட பின்பு!

யாரிது , மௌனக்
காரிருள் சூழ்ந்த நேரத்தில்
என் பின்னே
என்னை
நிழலாய் தொடர்ந்து வருவது?

மௌனமாய்
மறைந்திருக்க
முயற்ச்சித்தாலும்
எந்தப் பலனு மில்லை!
பயனும் மில்லை ..!

என்னதான்
முயன்றாலும்
என்னால்-
சிந்திக்காமல் இருக்க
முடிய வில்லை மனங்களின்
அவலங்களைத் தொட்டு ...!

ஆழமான கற்பனை செய்து
புழுதி கிளப்பித்
தூசியைப்
பத்திரிகைத் தளத்திலிருந்து
பார்வை வெளி நோக்கி
அனுப்புகிறாய்!

வாய் கொட்டும் ஒவ்வொரு
வார்த்தை யோடு
வேதனை கலக்கிறது,
அவள் வீசும்
சொற்களின் தழும்புகளால் ..!

என் பாச மூச்சுக்களின்
சுவாசங்களிழும்
முழு உணர்வுகளிழும்
காண முடிவது
இதயத்தின் கீறல்கள் ..!

நாண மற்றுப் போனவள்
ஆயினும்,
போலி உறவுகள் பின்தொடர நான்
முன் வந்து
உன் முன்னிலையில்
நின்றிட
வெட்க மடைகிறேன்,...!
வேதனைப் படுகிறேன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக