ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பசுமை வெளியில்
பகற்பொழுதில்
காவல் காக்கும்
ஏழைத் தொழிலாளி

இரந்தும்கொடுப்பார்
இங்கு எவரும்மில்லை
வருந்தி உழைத்தால்
வாழ்வில் உயரவில்லை ..!

போடியார் செய்யும்
பொல்லாச்செயல்களால்
வசந்தத்தைத் தேடி
வாடுவோர் பலர்!

சுரண்டல் வாழ்கையில்
சுகத்தை கண்டு
அகிலத்தில் வாழும்
அவர்களும் மனிதர்கள்

தினமும் வருந்தி
உழைக்கும் மனிதர்
வாழ்வில் வசந்தம்
ஏன் தான் பறிப்பு ...?

ஏழ்மைக் கவிஞன்
இங்கே உருவாகுவான்....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக