ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மழை பொலியாத வரண்ட பூமியில்
தென்றலுடன் மோதிக்கிளம்புகின்ற
புழுதியை நுகர்ந்தவாறு:
வரண்டு தவிக்கும் நாவுடன்
நகர்ந்து செல்கிறேன் !

உச்சி வெயில் பொழுதில்
நீர் ஊற்றுக்களாய் வடியும் வியர்வைகளோடு
தோனி வலை கைறுகளையெல்லாம்
கரையோரத்தில் நங்கூரம் விட்டு விட்டு :
வீ ட்டை நோக்கி நடக்கிறேன் !

மீன் படாத சோகத்தில்
பதறியழும் -
வயிற்றுப் பசியினைப் போக்கிடவென்று
குரும்பை ஒன்றை பறிக்க முனைகிறேன்...!

செழிப்பு வராத வறுமைக்குள்
உதிரும் மரக் கிளைகளாய் வாடி வதங்கி
பாலைவனமாகிப்போன
வரண்ட சஹாராவில்ஓடி ஓடி
ஹஜராவாய் நீர் தேடுகின்றதொரு
உணர்வு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக