ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அழகிய விழியில்
அபிநயம் புரியும்
தேவதையே;
உன்னை அர்ச்சனை செய்யும்
நினைவுகளில்
என் ஆன்மா பூக்கிறது.....!

வெண்மதி போலே
இதயவானில் பவனி வரும்
அன்புத் தேவதையே:
உன் புன்னகையில்
நான் புதியவனாகிறேன்....!

நினைவுகளில் ஆனந்தம்
காணும்_
இந்தக் காதல்
பித்தனுக்காக
நீ ராகமிசைக்க
வரமாட்டாயோ?

காலம் கரைந்தும்
கனவாகிப் போகும்
நம் கதைகளை
நிஜமாக்குவதற்கு
துடிக்கும்
எனக்காக
நீ பாதத்தை நகரத்து....

மலர்களால் மட்டுமல்ல
இவனின் மனமே
உனக்கு
ஆராதனை செய்யக்
காத்துக் கிடக்கிறதடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக