சனி, 15 அக்டோபர், 2011

தீ.......!!!!

என்னுடைய  நகர்வுகளில்
 என்னை  தொடர்ந்து   நடக்கவும்  முடியாது!
 தடுக்கவும்  முடியாது!!

 வாழ்க்கையின்  வறுமை  போரட்டத்தில்
 பசி தீ  எரிந்து  செல்கையில்
சாம்பலாகிறது
என்னை  தாங்கிச்  செல்லக்  கூடிய
வயிறு .....
    
பெருங்குடலை   சிருகுடலும்
சிருகுடலை   பெருங்குடலும்
 நோன்றி  எடுக்கின்ற  வேதனைகள்
  தாங்க  முடியாத  பசியுடன்
  
வறுமையில்   உருக்குலைந்து  கதறி துடிக்கும் பிறவி நான்
பொறுமை    இல்லையேல்
மண்ணோடு  மண்ணாகிப் போகத் து டிக்கும்  சடலம்  நான்
யாசகம்    கேட்பதை   வெறுக்கிறேன்
  
வீடு வீடாக சென்று அவமானப் படுவதயும்
வேதனைப்படுவதயும்   தவிக்கிறேன்

கைக்கு  எட்டாதது  வாய்க்கு  எட்டாது 
வாய்க்கு எட்டாதது    கைக்கு   எட்டாது

வெந்த  புண்ணில்  முள் குத்தியது  போல்  மனசு
இநதவறுமை வாழ்வின்
ஏதோ  ஒரு  ஏக்கததுடன்
எங்கோ   ஒரு    படுக்கையில்
எனது  துயரம்  மாறலாம்
மாறாமலும்  தொடரலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக