சனி, 15 அக்டோபர், 2011

வாசம் சுமக்கும்....!!

மனங்களில்
மலர்ச்சிப் பூக்கள்
விரியும் போது
மனசு மணக்கும்
வாசம் சுமக்கும்.

எதிர்பார்ப்புக்கள்
உள்ளச் சுவரில்
நிழலாடுகையில்
பின் தொடர்கின்ற
நினைவுகள்
நிழல்ளாகும்

நம்பிக்கை
தொலைக்கப்படும் போது
இதயம்
தீக்குள் சுடரினைத் தேடும்

உண்மைகள்
போலியாகிப் போகையில்
மனம்
பொன்னாடைகள்
போர்த்திக் கொள்ளும்

கவிதைகளை
விதைத்து விட்ட மண்ணில்
விமர்சகர்களின்
போலித் தூறல்கள்

புனிதம்
தீமைகளை புதைத்து விட்டு
நல்லவர்களுக்கு
வழிகாட்டுகிறது

இறைவா
இந்த சோதனையாளர்களுக்கு
நல்வழி காட்டு
மனங்களின் பிராத்தனை
துளிகளில்

பொறாமைகளை -
போட்டிகளை -
தாக்குதல்களை -
வளரவிடாது தடுப்பதை
எல்லாம் ஒன்று சேர்த்து
கழுவிக் கொள்ளட்டும்..!
அல்லது சுத்தம் செய்யட்டும்....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக