சனி, 15 அக்டோபர், 2011

அவமானம்.......

என் உயிரின் சுவாசங்களுக்குள்
மூச்சுக்களாய் தடவிச் செல்லும்
உன் நினைவு
உன் துயரங்களுக்காய்
வருந்தும் என் இதயம்.
உன் நினைவுகளின் நகர்வில்
நிழலாகும் மனசு.
எதிர்பார்த்திருக்கவில்லை.
என் குழந்தைகளின் குருதியாய்
நீ பிறந்திருப்பாய் என்று.

வாழ்க்கைப் புத்தகத்தில்
முன்னுரைப் பக்கங்கள்.
பிறப்பை உறுதிப்படுத்த
நான் உன்னை
தரிசிக்கக் கூடும்.

என்றும் உறவு
நிலைத்திருக்கிறது.
அப்பத்தா ,
தினம் சொல்லும் அறிவுரை
மலத்தைக் கண்டால் மிதிப்பான்
நீரைக் கண்டால் கழுவுவான்.
பாடலாய் செவிப் பாறைகளில்
ஒலிக்கும் அவமானம்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக