திங்கள், 24 அக்டோபர், 2011

நேரத்தை வீணக்க ,
விரும்ப வில்லை !
பொழுதுபோக்குவதற்க்காக
நான் ...
கவிதை எழுதவில்லை ..!
நிம்மதியாக மூச்சுக் கூட ,
விடவும்
முடியவில்லை ...!

என் கரங்கள் எழுதுவது
கவிதைகள் அல்ல ,
என் மண்ணின்
பெரு மூச்சுக்கள் ...!
மனதின் வேதனைகள் ..!
ஆத்மாக்களின் துயரங்கள் ...!

உங்கள் பாராட்டுக்களை
நான் ...
ஏற்றுக்கொள்ள
தகுதியானவளும் அல்ல ...!
கவியாத்துமாவும் அல்ல ...!

நீங்கள் ..,சந்தோசத்தை
என் எழுத்துக்களில்
பகர்கின்றீர்கள்
ஆனால் ..
என் மண்ணின்
வேதனைகளும் ...,
சோதனைகளயும் ...,
உள்வாங்கிக் கொண்டிருக்கும்
ஒரு ஜீவன் ...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக